Tripwire by Lee Child
My rating: 4 of 5 stars
View all my reviews
These are random quotes & excerpts from the books I have read and will be reading... All quotes are under the name of the book with the date I read them....
கலையை நேசிக்கிற, தன் ரசிகர்களை மதிக்கிற, ஒருவனால் மட்டும்தான், இப்படியெல்லாம் அர்ப்பணிப்போடு இருக்க முடியும். மொழி,நாடு என்கிற எல்லைகள் தாண்டி, ஜாக்கியை, இத்தனை கோடிபேர் காதலிப்பதற்கான காரணம் அதுவாகத்தான் இருக்கவேண்டும்.>
காந்தியின் நோக்கில் ஒரு மனித உயிர் அதுவே பிற உதவி இல்லாமல் வாழத்தேவையான கைத்தொழிலை கற்றிருக்கவேண்டும். இல்லையேல் அது முழுமையான ஆளுமை அல்ல. ஆகவே பெண்களுக்குக் கைத்தொழில் என்பதை காந்தி வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்
காந்தி அவரது வாயால் வன்முறையை நியாயப்படுத்திச் சொன்ன முக்கியமான தருணம் பாலியல்வன்முறை பற்றி பேசும்போதுதான். வல்லுறவில் ஈடுபடுபவனை அந்தப்பெண் தன் பல்லாலும் நகத்தாலும் கொல்லவேண்டும் என்று சொல்கிறார். அதற்காக அப்பெண் என்ன செய்தாலும் அது தகுமே என்று வாதிடுகிறார்.
உண்மையில் அது வல்லுறவு அல்ல, வீட்டைவிட்டு வெளியே வராதே என்ற அறிவிப்புதான். காந்தி வீட்டை விட்டு வெளியே கொண்டுவந்த இந்தியப்பெண்ணை நோக்கி இன்றைய சுரணையற்ற அரசியலதிகாரம் சொல்லும் வரியாகவே அதை பொருள்கொள்ளவேண்டும். இந்த போராட்டம் அந்த வரிக்கு எதிரானது. நடமாட்ட உரிமையை இந்த அரசும் சமூகமும் உறுதிசெய்கிறதா இல்லையா என்ற ஆதாரமான கேள்விதான் அது.
அப்படியென்றால் ஏன் பாலியல் வன்முறையை கொலைத்தண்டனைக்கான குற்றமாக காந்தி எண்ணினார்? ஏனென்றால் அது பெண்ணை பொதுவெளியில் இருந்து திரும்ப இருண்ட சமையலறைக்கு விரட்டுகிறது என்பதனால்தான். இருபதாம் நூற்றாண்டின் அரசியலால் அவள் அடைந்த அனைத்தையும் அவளிடமிருந்து பறிக்கிறது என்பதனால்தான்
A scene from a recent movie depicts the hero, accompanied by the comedian, waiting at a traffic signal. He asks a girl whose face is covered and is standing beside him, something. When the girl unveils her face the hero spits on the road, as the girl is not good looking. No other cinema of any other country can boast of such scenes.
பிறர்மனை நோக்காதேன்னு சம்நிலையா எழுதிட்டு அதே வள்ளுவர் பொண்டாட்டி பேச்சை கேக்காதேன்னு எழுதி வச்சிருக்கார். பத்தினி எரிச்சா வாழமட்டை எரியும், பத்தினி சொன்னா மழை பெய்யும்னு பெண்ணுக்கு தான் ஒழுக்கம் சொல்லி தர்றானுங்களே தவிர ஆண்களாலே உருவாக்கப்பட்டது தான் இந்த சட்டத்திட்டங்களலெல்லாம் என ஒப்புகொள்ள மறுக்கிறார்கள். ரொம்ப நாளா எனக்கொரு ஆசை, இந்த கற்பு மேல் நம்பிக்கையுள்ளவர்களிடம் ஒரு கேள்வி கேட்கனும்னு, என்னைக்காவது உங்க மனைவியையோ, அம்மாமையோ மழை பேயச்சொல்லி பார்த்திருக்கிறீர்களா? இல்லைல அதுனால முன்னாடியும், பின்னாடியும் மூடிகிட்டு இனிமே கலாச்சாரம், பண்பாடு பேச வராதிங்க!
எனக்கென்னவோ இது ஊடகங்களின் ஒருங்கிணைந்த திட்டமிட்ட வியபாரம் என்று தோன்றுகிறது. கொஞ்ச நாளைக்கு முன்பு நாஸ்டர்டாமின் ஜோசியங்களை வைத்துக்கொண்டு ஜல்லியடித்தார்கள். ஜனவரி 21 ஆந்தேதி வரை இந்த பரபரப்பு விவகாரம் உச்சதிற்குப் போய் பிறகு காணாமல் போய்விடும்.
மகத்தான இந்த பிரபஞ்சத்தில் பூமி என்ற சிறிய துணுக்கு ஏதோ ஒரு தற்செயலான காரணத்தால் எந்த நேரமும் அழிந்து போகலாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் நம் வாழ்நாளில் வந்தால் அதை நாம் கொண்டாடத்தான் வேண்டும். ஏனென்றால் எவ்வளவோ காலத்திற்குப் பிறகு பூமியின் வரலாற்றில் மனிதனின் வரலாற்றில் அப்படி ஒன்றைப் பார்க்கும் அனுபவம் நமக்குக் கிடைத்தால் அது எவ்வளவு பெரிய கொடுப்பினை? மேலும் யாருடைய மரணத்தின் துக்கமும் பிரிவும் நம்மை அண்டாத முழுமையான பரிசுத்தமான அழிவு அது. பூமியில் எல்லா குரோதங்களும் வன்முறையும் துக்கமும் அன்றோடு முடிவுக்கு வந்துவிடும். உலகத்தின் முடிவு என்பது மனித குலத்தின் மகத்தான விடுதலையாக இருக்கும்.
ஆனால் கடவுள் அவ்வளவு கருணை உள்ளவர் அல்ல. நம்மை அவ்வளவு ஈஸியாக விட்டுவிட மாட்டார். கவலைப்படாதீர்கள். 22 ஆந்தேதி காலை அர்விந்த கெஜ்ரிவால் இன்னொரு பெரிய ஊழலை வெளிப்படுத்துவார். சில இளைஞர்கள் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்வார்கள். பையன்கள் ஃபுட்போர்டில் தொங்கிக்கொண்டு போய்க்கொண்டிருப்பார்கள். ஷேர் மார்க்கெட்டில் குறியீட்டெண்கள் சில புள்ளிகள் உயரவோ தாழவோ கூடும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக உலகமே உற்சாகத்துடன் தயாராகிவிடும். நான் குங்குமதிற்கு என்னுடைய அடுத்த கட்டுரையை எழுதிக்கொண்டிருப்பேன்.
மேலும் உலகம் அழிவது என்பது நமக்கு புதிதல்லவே. ஒவ்வொரு மனிதனும் இறக்கும்போதும் இந்த உலகமொரு முறை அழியத்தானே செய்கிறது.